சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பொது மக்கள் பங்கேற்பு
முன்னுரை
விழிப்புணர்வின் நோக்கமானது சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பொது மக்களிடம் ஏற்படுத்தி அவர்கள் பங்களிப்புடன், வளமான சுற்றுச்சூழலை எதிர்கால சந்ததியர்களுக்கு விட்டுச் செல்வதாகும். மேலும், பல்வேறு மாசு கட்டுப்பாடு அளவீடுகளை, செம்மையான முறையில் அடைய, சுற்றுச்சூழல் பிரச்சாரம் ஒரு சிறந்த கருவியாக உள்ளது. வாழ்வதற்கான சிறந்த சூழல் என்ற முக்கிய இலக்கினை அடைய, அரசு இயந்திரம், சுற்றுச்சூழலுக்கு உகந்த விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு வகையான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அதன்படி 2018-2019 ஆம் ஆண்டில் கீழ்கண்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
உலக சுற்றுச்சூழல் தினம்
மனித சுற்றுச்சூழல் தொடர்பான ஸ்டாக்ஹோம் மாநாட்டின் முதல் நாளில் 1972 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையால் உலக சுற்றுச்சூழல் தினம் நிறுவப்பட்டது. இதன் விளைவாக மனித தொடர்புகள் மற்றும் சுற்றுச்சூழலை ஒருங்கிணைப்பது பற்றிய விவாதங்கள் நிகழ்ந்தன. இது ஆண்டுதோறும் சுமார் 143 நாடுகளின் பங்களிப்புடன் பொது மக்களுக்கான உலகளாவிய தளமாக வளர்ந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, உலக சற்றுச்சூழல் தினம் என்பது பூமியை காத்துக் கொள்வதற்குக்காக செய்யப்படும் செயல்களை உள்ளடக்கிய """"மக்கள் தினம்"" ஆகும். ஒவ்வொரு ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினமும் ஒரு முக்கிய கருத்தை மையமாக வைத்து நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. """"பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்லுங்கள்"" என்பதனை 2018 ஆம் ஆண்டிற்கான கருத்தாக்கமாக ஐக்கிய நாடுகள் சபையில் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 2018 ஜூன் 5ஆம் தேதி தமிழக அரசின் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தினக்கூட்டத்தை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் நடத்தியது. இதில் உறுப்பினர் செயலர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உயர் அதிகாரிகள், சுற்றுச்சூழல் இயக்குநர் மற்றும் இதர மூத்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்திலிருந்து கிண்டி குழந்தைகள் பூங்கா வரை ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கபடவேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து சுமார் 200 மாணவர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்ட மாணவர் பேரணி மற்றும் மரம் நடும் விழா நடத்தப்பட்டது.
இதுதவிர தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. தொழில்துறை வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் மரம் நடும் விழா நடைப்பெற்றது. இவ்விழாக்களில் வாரியத்தை சேர்ந்த ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடினர். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உலக சுற்றுச்சூழல் தினமான 05.06.2018 அன்று ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை, உற்பத்தி செய்தல், சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை ஜனவரி மாதம் 2019 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் தடை செய்யப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986ன் கீழ் 01.01.2019 முதல் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை குறித்த அரசாணை எண் 84, 25.06.2018 அன்று அறிவிக்கை செய்யப்பட்டது. இந்த தடையினை சீரிய முறையில் நடைமுறைப்படுத்த பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் படி, உள்ளாட்சி தலைவர்கள் கூட்டத்தில் திடக்கழிவு பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் அவர்களை நகராட்சி நிர்வாக ஆணையருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் முறை சாரா துறைகளாக செயல்படும் திடக்கழிவு மேலாண்மை தொழிலாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளால் அங்கீரிக்கப்பட்டு பயன்படுத்தப்படலாம்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நதிகளை சுத்தம் செய்ய தேர்வு செய்யப்பட்டது. ஊட்டியில் உள்ள மோயர் நதி பகுதி குப்பை இல்லாத பகுதியாக தேர்வு செய்யப்பட்டது.
முதுமலை புலி சாரணலாயம் முதல் கூடலூர் வரை மோயர் ஆற்றின் கரையில் சுமார் 10 கிலோ மீட்டர் பொது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும் ரிசர்வ் காடுகள் சுமார் 50 கிலோமீட்டர் நீளத்திற்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கப்படுவதில்லை.
அதிகாரிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நதியில் குப்பைகள் சேராதபடி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை
நீர் நிலைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் விநாயகர் சிலைகளை பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மற்றும் பெயிண்ட்டுகளை பயன்படுத்தி தயாரிக்க வேண்டாம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் மற்றும் அனைத்து நகரங்களிலும் நடத்தப்பட்டது. மேலும், சிலைகள் கரைக்கப்படுவதற்கு முன்பும் பின்பும், கண்டறியப்பட்ட நீர் நிலைகளின் நீரின் தரம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தினால் கண்காணிக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை
பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு மற்றும் ஒலி மாசு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக அக்டோபர் 2018 தீபாவளி பண்டிகையின் போது வாரியம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி சுற்றுப்புற காற்று மற்றும் ஒலி அளவினை கண்காணிப்பு செய்து வருகிறது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும் மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் வாரியம் அறிவுறுத்திவருகிறது.
சுற்றுச்சூழல் அலுவலகத்திற்கு மட்டும் ரூபாய் மூன்று லட்சத்து முப்பதாயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம் ரூபாய் 7 லட்சம் தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக மட்டும் வாரியத்தால் செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி தினத்தையும் சேர்த்து நான்கு நாட்கள் தமிழ்நாட்டின் ஒன்பது முக்கிய மாவட்டங்களில் (சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், சேலம் மற்றும் ஈரோடு) விழிப்புணர்வு ஏற்படுத்த ரூபாய். 368160 வழங்கப்பட்டது. மேலும், சென்னை, திருச்சி, கோயம்புத்துhர், மதுரை, திருநெல்வேலி, வேலுர், சேலம், ஓசூர், திருப்பூர், திண்டுக்கல், மற்றும் கடலூர் ஆகிய நகரங்களில் சுற்றுப்புற காற்றுத்தரம் மற்றும் ஒலி அளவினை ஏழு நாட்கள் கண்காணித்து அதன் முடிவுகள் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
போகி பண்டிகை
டயர்கள், டியூபுகள், நெகிழி பொருட்கள், துணிகள் போன்ற வீணான பொருட்களை எரிக்கவேண்டாம் என விழிப்புணர்வு பிரச்சாரங்கள் வாரியத்தால் ஜனவரி 2019 போகி பண்டிகை அன்று நடத்தப்பட்டது. மேலும் வானொலி மூலம் போகி அன்றுடன் சேர்த்து இரண்டு நாட்கள் தமிழ்நாட்டின் ஓன்பது முக்கிய மாவட்டங்களில் (சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், சேலம் மற்றும் ஈரோடு) விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.138066 வழங்கப்பட்டது. மேலும் சென்னை மாநகரில், கத்திவாக்கம், மணலி, தில்லை நகர் (கொளத்தூர்), தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், பெசன்ட் நகர், தியாகராயா நகர், பெருங்குடி, காரம்பாக்கம், மீனம்பாக்கம், கோடம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 15 இடங்களில் போகி பண்டிகைக்கு முந்தைய நாளிலும், போகி பண்டிகை நாளிலும், சுற்றுப்புற காற்று தரத்தினை வாரியம் கண்காணிப்பு செய்து வருகிறது.
கார்த்திகை மகா தீபத்திருவிழா
நவம்பர் 2018ல் திருவண்ணாமலையில் நடைப்பெற்ற கார்த்திகை மகா தீபத்திருவிழாவின் போது பிளாஸ்டிக் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகத்தின் மூலம் நடத்தப்பட்டது. பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து அதற்குமாற்றான துணிப்பை, காகிதப் பை, சணல் பை போன்றவற்றை பயன்படுத்த ஊக்குவிக்கும் வண்ணம் கார்த்திகை மகா தீபத்திருவிழாவிற்கு துணிப்பை மற்றும் சணல்பையுடன் வரும் பொது மக்களுக்கு கூப்பன் வழங்கி, இறுதியில் குலுக்கல் மூலம் தேர்வு செய்து தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி பொது மக்களிடையே பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக திருவண்ணாமலை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்திற்கு ரூ.116000/- வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மேலாண்மைக்கென தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பிற துறைகளுக்கு வழங்கிய நிதி விவரங்கள்:
தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனத்தால் (TWICL) தயாரித்து அளிக்கப்பட உள்ள ஆய்வு மற்றும் செயலாக்க அறிக்கை (DSFR)
தமிழ்நாட்டில் உள்ள வைகை (மதுரை), பவானி (மேட்டுப்பாளையம்), காவேரி (ஸ்ரீரங்கம், குமாரபாளையம் மற்றும் பள்ளிப்பாளையம்) ஆகிய ஆறுகளில் உள்ள மாசினை ஆய்வு செய்து செயலாக்க அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனத்திற்கு, தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சுமார் ரூ.55 லட்சத்தினை ஒதுக்கி உள்ளது. இதனை தொடர்ந்து அந்நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டு, சுமார் ரூ.2750000/- (50 சதவித கட்டணம்) முன்பணமாக அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஒரு தொடக்க அறிக்கையினை வாரியத்திற்கு சமர்ப்பித்துள்ளது.